Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/சொர்க்கம் நம் கையில்!

சொர்க்கம் நம் கையில்!

சொர்க்கம் நம் கையில்!

சொர்க்கம் நம் கையில்!

ADDED : மே 21, 2012 12:05 PM


Google News
Latest Tamil News
* கைகளின் அழகு, அதில் அணியும் வளையல்களிலும், ஆபரணங்களிலும் இல்லை. மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில் தான் இருக்கிறது.

* தனித்து வாழாதீர்கள். அண்டை வீட்டாரிடம் ஒதுங்கி இருக்காதீர்கள்.

* கடவுளை எழுப்புவதற்காகக் காலையில் சுப்ரபாதம் பாடுவதில்லை. அறியாமையில் இருந்து மனிதன் எழவே பாடப்படுகிறது.

* மனதைச் சமநிலையில் வைத்திருக்க, நல்ல பழக்கங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள்.

* மற்றவர் பேசும் பழிச்சொல்லையும் புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாதீர்கள். இறுதியில் வெற்றி உங்களுக்கே.

* எப்போதும் கடவுளிடம் மனஅமைதியைத் தரும்படி வேண்டிக் கொள்ளுங்கள். இதுவே சுகமான, நியாயமான வழிபாடு.

* சொர்க்கத்தை யாரும் தேடிப் போக வேண்டியதுஇல்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்ல ஒழுக்கம், தூய சிந்தனை இருந்துவிட்டால் சொர்க்கம் கைக்குள் வந்துவிடும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us